This year's theme was "
Sangeetha Shakti Ulaa". I have always believed in having a specific theme for my Kolu, instead of having just a random display of dolls. Also, every year, guests who come home during Navarathri get to know something new about the concept chosen.

The traditional Kolu:
ABOUT THE THEME:சங்கீத சக்தி உலா :அம்பாள் தான் ஞானம்.
சத்-சித்-ஆனந்த என்று கேள்வி படுகிறோமே, அதில் சித் என்கிற பேரறிவான ஞானம் அம்பிகை தான்.
சைதன்ய ரூபிணி என்பார்கள். '
சிதேக ரஸ ரூபிணி' என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது.
ஆணவம், மாயை, கர்மம் என்று சொல்ல கூடிய பாசங்கள் நிறைந்த இவ்வுலகில் பிறவி என்பது இறைவனுடைய அருளால் நடக்கக் கூடிய ஒரு செயலாகும்.
ஆன்மாக்களாகிய நாம் அனைவரும் மனதால், வாக்கால், சரீரத்தால் இறைவனுக்கு தொண்டு செய்து அவனுடைய திருவடிகளில் சமர்பித்து அருள் பெறுவது என்பது எவ்வளவு பிறவி எடுத்தாலும் கிடைக்காத ஒன்றாகும். இச் செயல் நாம் போற்றக்கூடிய முத்துச்வாமி தீக்ஷிதர், த்யாகராஜர், சியாமா சாஸ்திரி, பாபநாசம் சிவன், நாயன்மார்கள், ஆழ்வார்கள், இன்னும் பல பெரிய வாக்கேயகாரர்கள் இறைவன்- இறைவிக்கு பல தொண்டுகளை செய்து அதன் மூலம் நமக்கு பெருமைகளையும் நல்ல வழிகளையும் பொக்கிஷமாக கொடுத்துள்ளனர். இதில் சக்தியை பற்றி பாடியவர்கள் பல உள்ளன.
Thus the theme takes up different forms of Shakti, as depicted by different Carnatic composers.
We begin with
Bhagavathi.
பகவதி: சோட்டானிக்கரை பகவதி சரஸ்வதியாக காலையிலும், மதியம் லக்ஷ்மியாகவும், மாலையில் பார்வதியாகவும் வணங்கப் படுகிறாள்.

(Goddess Bhagavati in the centre.)
Thus unfolds the theme of
Durga-Lakshmi-Saraswathi, as the Goddess is worshipped as Durga during the first 3 days of Navarathri, as Goddess Lakshmi during the next 3 days and as Goddess Saraswathi during the last 3 days of the festival.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் துவங்குவது தேவியின் வழிப்பாட்டுக்கு உகந்த நவராத்திரி. சிவாலயங்களில் அம்பிகைக்கு தனி பூஜை நடத்தி கொலு மண்டபத்தில் கொலு அமர்த்துவர்.
DURGA:துர்க்கமன் என்ற அசுரனை வதம் செய்ததால் துர்க்கை என்று பெயர்.
"ஸ்வர்காபவர்க" - ஸ்வர்கத்தையும் மோக்ஷத்தையும் தருபவள்.
1.
வனதுர்கே : முத்தையா பாகவதர் மகாராஜா கிருஷ்ண ராஜேந்திர உடையாரின் விருப்பத்திற்கிணங்க சாமுண்டேஸ்வரி மீது 108 அஷ்டோத்தர கீர்த்தனைகளை பாடினார். அதில் ஒரு கீர்த்தனை தான் வனஸ்பதி ராகத்தில் அமைந்த வனதுர்கே என்ற கிருதி.

(The face of the Goddess on the left is made out of wax mould and painted.)
2.
ஸ்ரீ சாமுண்டேஸ்வரி : மைசூர் வாசுதேவாச்சார் அவர்கள் சாமுண்டேஸ்வரி மீது இயற்றிய பிலஹரி ராக கிருதி இது.
3.
பராசக்தி : பராசக்தியே ! என்னை காப்பாற்ற கூடாதா, என்று த்யாகராஜ ஸ்வாமிகள் அம்பாளிடம் சாவேரி ராக கிருதியில் கெஞ்சுகிறார். அனாதி காலம் முதல் விளங்குபவளே ! அறம் வளர்த்து ஸ்ரீபுர அதீஸ்வரியாக வீற்றிருக்கும் அம்பிகையே ! ஹிமகிரி தனயே ! இந்திரன், பிரம்மன் முதலிய அனைவரும் உன் முக மலர்ச்சியை எதிர்பார்த்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

(Dolls seen in the above photo are Vishnudurga,Mahishaasuramardhini, Chamundeshwari and the photo is that of Sri.Mysore Vasudevachar.)

(The composers seen in the above photo are Sri.Harikesanallur Muthiah Bhagavatar(the color photo at the back), Sri.Periasamy Thooran for the Kriti Taaye Tripurasundari.)
LAKSHMI:லக்ஷ்மி : செல்வத்துக்கு தேவதையாக இருக்கப் பட்டவள் மகாலட்சுமி.
மகாலக்ஷ்மியை எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிற மாதிரி "
கனகதாராஸ்தவம்" என்ற ஸ்தோத்ரம் அமைந்திருக்கிறது.
1.
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் : முத்துச்வாமி தீட்சிதர் திருவாரூரில் வாழ்ந்த சமயத்தில்தான் திருமகளின் திருவருளைப் பெரும் சம்பவம் அவர் வாழ்வில் நடந்தது. அதற்குக் காரணம் அவர் மனைவியின் ஆசை. அந்த ஆசைக்கு காரணம் அக்கம்பக்கத்து சூழல். பொருள் வேண்டிப் பாடுவோர் பலர் இருந்த காலம் அது. இறைவன் அருள் வேண்டி மட்டும் பாடிய அறிய பாவாணர்களில் ஒருவர் முத்துச்வாமி தீட்சிதர். அவரது மனைவிக்கு நகைகள் மீது ஆசை உண்டாயிற்று. தஞ்சை மன்னனைப் பார்த்து பேட்டி கொண்டால் நிறைய சன்மானமும் நிதிக்குவியல்கள் கிடைக்குமென்று யோசனையும் தெரிவித்தாள். தீட்சிதரும் தங்கமகளை போற்றிடும் பாடல் ஒன்றை லலிதா ராகத்தில் பாடினார் - "ஹிரண்மயீம் லக்ஷ்மீம்".

அன்று இரவு கனக மகள் சர்வாபரண பூஷிதையாய் தீட்சிதரின் மனைவிக்கு தரிசனம் கொடுத்தாள். ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்து இவை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று திகட்டும் படியாக கேட்டாள். தீட்சிதரின் மனைவி அந்த சந்தோஷ செய்தியை அவரிடம் தெரிவித்தாள். எனக்கு ஆபரணங்கள் மீது இனி ஆசையே இல்லை என்று கூறினாள்.
மகிழ்ந்த தீட்சிதர் தன்னைப் பெருமை படுத்திய வரலட்சுமியை போற்றி நன்றி கூறி மற்றொரு துதியைப் பாடினார் - "ஸ்ரீ வரலக்ஷ்மி"- செல்வங்களை அளிப்பவளும் அழகிய பத்ம பாதங்களையுடையவளும் ரசனைக்கு இருப்பிடமான அம்மா வரலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். மகிழ்வான புன்னகையும் மங்களமான பொன் நகையும் என் இல்லத்தில் சேர்ந்திருக்க அருள்வாயாக.

(The story at the back is the Kanakadhara story)
Other stories and songs depicted for Lakshmi are the Lakshmi-Kubera Puja, with the song Ksheerabdhi by Annamacharya and Bhagyada Lakshmi by Purandara Dasa) :
SARASWATHI:
காஞ்சிபுரத்தில் சரஸ்வதியின் அருள் விசேஷமாக சாநித்யம் பெற்றிருக்கிறது என்பதை மூகர் கூறுகிறார். ஊமையாக இருந்த மூகருக்கு சாக்ஷாத் காமாட்சியே வாக்தேவியாக வந்து அருளி அவர் மகா கவியான காமாட்சி ஆலயத்தில் எட்டு கைகளோடு கூடிய பரம சௌந்தர்யமான ஒரு சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு.
சரஸ்வதி பூஜை சரத் காலத்தில் நிகழ்வதால் "சாரதா நவராத்திரி" என்றும் சொல்லப் படுகிறது.
ஜபமாலையும் ஏட்டு சுவடியும் ஞானத்தை தெரிவிக்கிற அடையாளங்கள்.
சரஸ்வதி சகல கலா வாணி. வித்யா ஸ்வரூபிணி. வெள்ளை ஆடை தரித்தவள். சந்திரகலை தன் தலையில்.
1.
சரஸ்வதி தயை நிதி : கூத்தனூர் சரஸ்வதியின் மீது சரஸ்வதி ராகத்தில் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய கிருதி இது.
2.
ஸாரஸ தள நயனே : முத்தையா பாகவதர் இயற்றிய சாரமதி ராக கிருதியில் சரஸ்வதி தேவியின் வர்ணனை மிக அழகு.
BHUVANESHWARI :புவனேஸ்வரி : பாபநாசம் சிவன் அவர்கள் புவனேஸ்வரியை இந்த கிருதியில் பூஜிக்கிறார்.
"புவனேஸ்வரி பாதம் நினைந்து" - Ragam Begada 
(The composer seen in this picture is Sri.Papanasam Sivan.)
RAJA RAJESHWARI :ராஜ ராஜேஸ்வரி : ச்யாமா சாஸ்த்ரிகள் இயற்றிய நாட்டை ராக கிருதி "பாஹிமாம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி"

(The composer doll seen in the picture is Syama Sastri.)
MARIAMMAN :மாரியம்மன் : மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் உருகிப் பாடிய பாடல் "தேடி உன்னை சரண் அடைந்தேன் தேச முத்து மாரி"

(Mahakavi Subramanya Bharatiyar doll is seen)
KARPAGAMBAL :கற்பகாம்பாள் : பாபநாசம் சிவன் அவர்கள் உருகி பாடிய மத்யமாவதி ராகத்தில் அமைந்த கிருதி "கற்பகமே கண் பாராய்"


(This peacock was done by Vishruthi using satin ribbons.)
The Goddess interpreted as GURU :
அம்பாள் தேசிக (குரு) ரூபத்தில் வந்து ஞானம் தருவதாக காளிதாசன் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள் .
குறிப்பாக
ஸ்பரிச தீக்ஷை, நயன தீக்ஷை, ஸ்மரண தீக்ஷை. இதில் ஒவ்வொன்றையும் அவள் ஒவ்வொரு ரூபத்தில் செய்வதாக சொல்வார்கள்.
KAMAKSHI - MEENAKSHI - VISAALAKSHI :ஸ்பரிச தீக்ஷைக்கு
குக்குட(கோழி) தீக்ஷை என்று இன்னொரு பெயர். கோழி முட்டை மேல் உட்கார்ந்து அதன் மேல் தன் ஸ்பரிசம் நன்றாக படும்படி அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது. இது தான் ஸ்பரிச தீக்ஷை. அதேபோல் குரு தன் சிஷ்யனை தொட்டு அவனுடைய அறியாமை ஓட்டைப் பிளக்கப் பண்ணுவது ஸ்பரிச தீக்ஷை. காமாக்ஷி பக்தனை ஸ்பரிசித்து அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடுபவள்.
சௌந்தரய லஹரியில் ஆசார்யாள் அம்பாளிடம், 'வேதங்கள் தாங்கிக் கொண்டிருக்கிற உன் திருவடிகளை என் தலையில் தயையினால் வை அம்மா' என்று பிரார்த்திக்கிறார்.(
84th sloka) - 'ச்ருதீநாம் மூர்தானோ'. காமாக்ஷி ச்பரிசமான குக்குட தீக்ஷையை அளிக்கிறாள்.
HIMADRI SUTHE - KALYANI -SYAMA SASTRI :
Anupallavi:
சுமேரு மத்ய வாஸினீம் - மேரு மலைகளுக்கு நடுவில் அமர்ந்திருப்பவள். சுமேரு எனும் தங்கமலை உலகத்தை தாங்கும் ஆதாரமாய் உள்ளது. இதன் நடுவில் முக்கோணம் போல் மூன்று சிகரங்கள் உள்ளன. இச் சிகரங்களுக்கு நடுவே அவற்றைவிட உயர்வாக நான்காவதாக ஒரு சிகரம் உள்ளது. தேவி உறையும் ஸ்ரீ நகரம் இச் சிகரத்தில் உள்ளது.

(Also seen in the photo are the Syama Sastri doll,the kalpavruksham and Kamadhenu.)
சதானந்தமயி (Ragam Hindolam) - "சிந்தாமணி கிரஹ வாசினி"சிந்தாமணி கிரஹ விளக்கம் - 'சிந்தாமணி கிரஹச்தாயை நம:' - காமதேனு, கல்பவ்ருக்ஷம், சிந்தாமணி இவை மூன்றும் மனம் நினைப்பதை தந்து அருளும்.
VINAYAKUNI - MADHYAMAVATI - TYAGARAJAR :மத்யமாவதி ராக கிருதியில் த்யாகராஜர் காமாட்சியிடம் தன்னை ரட்சிக்குமாறு வேண்டுகிறார்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் "தனுமத்யா" என்று அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு.விநாயகரை ரட்சித்த மாதிரி என்னையும் காப்பாற்று என்கிறார் அவர்.

(Composer seen in this photo is Sri.Tyagaraja)
நயன தீக்ஷைக்கு
மத்ஸ்ய (மீன்) தீக்ஷை என்றும் ஒரு பெயர். மீன் ஜலத்திற்க்குள் முட்டையிட்டு விட்டு பிரவாஹத்தில் மீன் ஒரு இடத்தில் நிற்காமல் சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கும். தாய் மீன் தன் கண்ணால் முட்டையை தீக்ஷையாக பார்க்குமாம். உடனே மீன் குஞ்சு வெளியே வந்து விடும்.
மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருப்பதால் அவளைத்தான் கடாக்ஷத்தாலேயே ஞான தீக்ஷை தரும் குருவாக சொல்லியிருக்கிறது .
1.தேவி மீன நேத்ரி - சியாமா சாஸ்த்ரிகள் இயற்றிய மீனாக்ஷி நவாவரண கிருதிகளில் ஒன்று இது. ராகம் சங்கராபரணம்.
2.மீனாக்ஷி மேமுதம் : கமகக்ரிய ராகத்தில் மிக அழகான கிருதி இது. முத்துச்வாமி தீட்சிதர் அவர்கள் இயற்றியது.
கதம்ப வன சஞ்சாரி, மலயத்வஜ பாண்டியரின் புதல்வி. கதம்ப மரத்தால் சூழப்பட்டு இருக்கும் மதுரை. ஆகையால் மதுரைக்கு கதம்பவனம் என்று பெயர்.

(Composer seen in this photo is Sri. Muttuswami Dikshitar.)
கமட (ஆமை) தீக்ஷை: ஆமை கரைக்கு வந்து முட்டையிட்டு விட்டு தண்ணீர்க்குள்ளே போய் விடுமாம். ஆனாலும் அது முட்டை குஞ்சு ரூபமாக நல்லபடி பொரிய வேண்டுமே என்ற சிந்தனையாகவே இருக்குமாம். உடனே குஞ்சு வெளியே வந்து விடும். காசியிலே இருக்கிற
விசாலாக்ஷி பக்தர்களை அனுக்ரஹ சிந்தையோடு நினைத்தே ஞானம் அளிக்கும் கமட தீக்ஷை குருவாயிருக்கிறார். தாயாரே குருவாக ஞானப்பால் ஊட்டுகிறார்.
1.
அன்னபூர்ணே விசாலாக்ஷி : சியாமா ராக கிருதியில் முத்துச்வாமி தீட்சிதர் விசாலாட்சியை பிரார்த்திக்கிறார்.
GOWRI PUJA:
This is famous in Karnataka and bangles find an important place in this puja.

Other handicrafts that were featured in the Kolu:

(Paintings done by Vishruthi and the plate decoration done by Vishvesh)

(Pot paintings and jewel boxes done by Vishruthi and Vishvesh)

(Rangoli and Kolams done by Vishruthi)

(Top water rangoli done by Vishruthi)
Goddess decorated with Nel (arisi) :

The photo below shows a special lamp which symbolises Durga-Lakshmi-Saraswathi. Underneath the lamp are, again, handicrafts made by Vishruthi and Vishvesh:

-----------------------------------------------------------------------------------------------
PRIZES THAT OUR KOLU HAS WON THIS YEAR:
1. One among the top 10 Kolus chosen by Adyar Times:

2. RAJ TV : BEST KOLU OF THE DAY PRIZE
3. BANK OF BARODA KOLU CONTEST
4.
"INFORMATIVE KOLU" AWARD from Sumukhi Rajasekharan Memorial Foundation, Chennai
5. HINDU DOWNTOWN KOLU KONDATTAM 2010 :
(2nd runner-up in the Adyar Zone.)


